Wednesday 26 February 2014

தாய்க்கு மரியாதை

மரியாவை மதிக்காததால்தானே, "என் தாய் யார்?" (மத்தேயு 12:48) என்று கேட்டு இயேசு அவரை அவமானப் படுத்தினார்?

   "இறைமகன் இயேசு விண்ணகத்தில் தாய் இல்லாதவரா கவும், மண்ணகத்தில் தந்தை இல்லாதவராகவும் தோன்றி னார்" என்பதே நமது விசுவாசம். 'இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்' (லூக்கா 2:52) என்று நற் செய்தி கூறுகிறது. மனிதர்களுக்கு பத்து கட்டளைகளை வழங்கிய கடவுள், ஆண்டவர் பேரிலுள்ள கடமை முடிந்த தும் பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமை குறித்து எடுத்துரைக்கிறார். "உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட" (விடுதலைப் பயணம் 20:12) என்பதே ஆண்ட வர் நமக்கு வழங்கிய கட்டளை. "நீர் வாழ்வடைய விரும் பினால் கட்டளைகளைக் கடைப்பிடியும்" (மத்தேயு 16:13) என்று கூறிய இயேசு, "திருச்சட்டத்தையும் இறைவாக்கு களையும் நிறைவேற்றுவதற்கே வந்தார்." (மத்தேயு 5:17) எனவே, அவர் விண்ணகத் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருந்ததுடன், தம் மண்ணகப் பெற்றோர்களுக்கும் பணிந்து நடந்தார். (லூக்கா 2:49,51)
   'ஒருநாள் மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக் கொண்டிருந்தபோது, அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து அவருடன் பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருந்தார்கள். ஒருவர் இயேசுவை நோக்கி, "அதோ, உம்தாயும் சகோதரர்களும் உம்மோடு பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருக்கின்றார்கள்" என்றார். அதற்கு இயேசு, "என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்? விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்று பவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்" என்றார்.' (மத்தேயு 12:46-50) இந்நிகழ்வில் இயேசு, மக்கள் அனைவரையுமே தம் சகோதரராகவும், சகோதரியாகவும், தாயாகவும் மாற அழைப்பு விடுக்கிறார். மேலும் விண்ணகத் தந்தையின் திருவுளத்துக்கு தம்மை முற்றிலும் அர்ப்பணித்து, மீட்புத் திட்டத்தில் ஒத்துழைத்த அன்னை மரியாவையும் இயேசு பெருமைப் படுத்துகிறார்.
   "கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதி யுள்ளவர் அல்ல" (லூக்கா 9:62) என்ற தம் வார்த்தைகளுக்கு ஏற்ப, இயேசு இங்கு குடும்ப உறவுகளை விலக்கி வைப்பதை காண்கிறோம். இதில் மரியாவை அவமானப்படுத்தும் நோக் கம் எதுவுமில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். "என்னைவிடத் தம் தந்தையிடமோ தாயிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர் என கருதப்படத் தகுதியற்றோர்" (மத்தேயு 10:37) என்ற தமது போதனைக்கு உயிரூட்டம் கொடுக்கும் வகையில், தாம் இறைத் தந்தைக்கு உரியவர் என்பதை இயேசு இங்கு தெளிவுபடுத்துகிறார். அதே வேளையில், உலக மீட்புக்காக இறைத்தந்தையின் திருவுளத்துக்கு தம்மை முழுமையாக அர்ப்பணித்து, வார்த்தை யான இறைமகனுக்கு மனித உடல் கொடுத்த கன்னி மரியாவின் மேன்மையையும் இயேசு புகழ்ந்துரைக்கின்றார்.

Wednesday 19 February 2014

மகனுடன் மரியா

மரியா முக்கியமானவர் என்றால் நற்செய்தி நூல்க ளில் அவரைப் பற்றி சிறிதளவு மட்டுமே எழுதப்பட் டிருப்பது ஏன்?

   இறைமகன் இயேசுவின் வாழ்வையும், வழிகாட்டுதலை யும் நமக்கு வழங்கவே நற்செய்தி நூல்கள் எழுதப்பட் டன. "மனிதராய் பிறந்தவர்களுள் பெரியவர்" (மத்தேயு 11: 11) என்று இயேசுவால் போற்றப்பட்ட திருமுழுக்கு யோவா னைப் பற்றியும், "பெண்களுக்குள் ஆசி பெற்றவர்" (லூக்கா 1:42) என்று வாழ்த்தப்பட்ட கன்னி மரியாவைப் பற்றியும் நற்செய்திகள் அதிகமாக பேசவில்லை என்றாலும், மீட்புத் திட்டத்தில் அவர்களின் பங்கைத் தெளிவாகவே எடுத்து ரைக்கின்றன. "தாவீதின் குடும்பத்தில் வல்லமை உடைய மீட்பர் தோன்ற" (லூக்கா 1:70) முழு மனதோடு ஒத்துழைத் தவர் என்பதால், இறைவனின் திட்டத்தில் மரியா முக்கிய மானவர் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. இயேசு வைக் கருத்தாங்கியது முதல் கல்லறையில் வைத்தது வரையிலான மரியாவின் பங்கேற்பை நற்செய்தி நூல்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன.
   உன்னதரான இறைமகனைக் கருத்தாங்கி பெற்றெடுக்கு மாறு, "கடவுளின் அருளை மரியா கண்டடைந்தார்." (லூக்கா 1:30) கணவரை அறியாத கன்னி யாக இருந்தும், "ஆண்டவர் தமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பியதால் மரியா பேறுபெற்றவரானார்." (லூக்கா 1:45) இவ்வாறு கடவுளின் திட்டத்துக்கு தம்மையே அடிமையாக கையளித்த மரியாவை "எல்லாத் தலைமுறையினரும் பேறுபெற்றவர் என்பர்." (லூக்கா 1:48) இறைவார்த்தையான இயேசுவைக் கருத்தாங்கிப் பெற்றெடுத்த மரியா, 'இறைத் திட்டத்தின்படி நடைபெற்ற நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்.' (லூக்கா 2:19) இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தபோது, "உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்" (லூக்கா 2:35) என்ற இறைவாக்கு மரியாவுக்கு அருளப்பட்டது.
   குழந்தை இயேசுவைக் காண வந்த கீழ்த்திசை ஞானிகள், "குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டு நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து வணங்கினார்கள்." (மத்தேயு 2:11) இயேசு எப்போதும் தம் தாய் மரியாவுக்குப் பணிந்து நடந்தார். (லூக்கா 2:51) அன்னை மரியா வின் நம்பிக்கையால், கானாவூர் திருமணத்தில் இயேசு தண்ணீர திராட்சை இரசமாக மாற்றி னார். (யோவான் 2:1-11) 'மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக் கொண்டிருந்தபோது அவருடைய தாய் மரியா அவருடன் பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருந்தார்.' (மத்தேயு 12:46) இவ்வாறு இயேசுவின் விருப்பத்தை அறிந்து நடக்க, மரியா எப்போதும் ஆவலாய் காத்திருந்தார். இறுதியாக சிலுவை அருகில் நின்ற மரியாவை, இயேசு தம் சீடருக்கு தாயாக அளித்தார். (யோவான் 19:25-27) அந்த தாயை மதித்து போற்றுவது நம் கடமையாகும்.

Wednesday 12 February 2014

பரிந்துரை மரியா

"பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லா ரும் என்னிடம் வாருங்கள்!" (மத்தேயு 11:28) என்று இயேசு அழைக்கும்போது, மரியாவிடம் செல்வது ஏன்?

   "நாம் கடவுளுக்குப் பகைவர்களாயிருந்தும் அவருடைய மகன் இயேசு நமக்காக உயிரைக் கொடுத்ததால் கடவு ளோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம்." (உரோமையர் 5:10) நம்மை இறைத்தந்தையோடு ஒப்புரவாக்கி நமது மீட்புக்கு காரணமான தலைமைக் குரு இயேசுவின் தாயாகுமாறு, விண்ணக அழைப்பு (எபிரேயர் 3:1) பெற்றவர் கன்னி மரியா. இவ்வாறு, "மரியாவின் மூலமாக மாட்சி பெறத் திருவுளம் கொண்ட நித்திய தந்தை, அவர் மூலமாக எல்லையற்ற வரங்களை நம்மீது பொழியவும் விருப்பம் கொண்டார். மரியா வழியாக இறைத்தந்தை நமக்குத் தந்த கொடைகளுள் மிகச்சிறந்த நற்கொடை நமது ஆண்டவ ராகிய இயேசு கிறிஸ்துவே!" (மரியாயின் சேனை கைநூல் அதி. 5/1) இயேசுவை மனிதகுலத்துக்கு கொடையாக அளித்தவர் மரியா என்பதால், மரியாவை நாடும் அனைவ ரும் இயேசுவைக் கண்டடைகின்றனர்.
   "'கடவுள் ஒருவரே. கடவுளுக்கும் மனிதருக்குமிடையே இணைப்பாளரும் ஒருவரே. அவரே இயேசு கிறிஸ்து என்னும் மனிதர். அனைவரின் மீட்புக்காக அவர் தம்மையே ஈடாகத் தந்தார்' (1திமோத்தேயு  2:5-6) என்ற திருத்தூதரின் கூற்றுக்கேற்ப, நம் இணைப்பாளர் ஒருவரே. இறைமகன் இயேசுவின் இந்த இணைப்பாளர் பணி தன்னிகரற்றது. எனவே மரியாவின் பரிந்துரைக்கும் பணியால், கிறிஸ்துவின் இணைப்பாளர் பணி சற்றேனும் மறைவதுமில்லை, குறைவதுமில்லை. மாறாக, அதன் ஆறறல் இதன் வழியாக வெளிப்படு கிறது. ஏனெனில், தூய கன்னி கொண்டுள்ள நிறைவாழ்வளிக்கும் செல்வாக்கு அனைத்தும் கிறிஸ்துவினுடைய பேறுபலன்களின் நிறைவுப் பெருக்கத்தினின்றே வழிகின்றது; அவரது இணைப்பாளர் பணியையே அடித்தளமாகக் கொண்டுள்ளது; அப்பணியை முற்றிலும் சார்ந்த தாய் இருக்கின்றது; அதிலிருந்தே தன் ஆற்றல் அனைத்தையும் பெறுகின்றது." (திருச்சபை எண். 60)
   மரி லத்தாஸ்ட் (1822-1847) என்ற கன்னிக்கு காட்சி அளித்த நம் ஆண்டவர் இயேசு, "கடவு ளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளராக நான் இருக்கிறதைப் போன்று, எனக்கும் உங்களுக்கும் இடையிலான இணைப்பாளராக கன்னி மரியாவை நியமித்திருக்கிறேன். ஆகவே, உங்களுக்கு நான் கொடுக்கிற அருள்வரங்களை இறையன்னை வழியாக மட்டுமே பெற முடியும். உங்களுக்கு வேண்டிய அனைத்தையும், என் திவ்விய தாயின் பரிந்துரை மூலம் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். அவர் ஆசி வழங்குபவர்களுக்கு நானும் ஆசி வழங்குவேன்" என்று கூறியுள்ளார். எனவே, நமது சுமைகளை அன்னை மரியாவிடம் இறக்கி வைக்கும் போது, இறைமகன் இயேசுவின் ஆறுதலை நாம் கண்டடைய முடியும். இறைவனின் திட்டத் தில் மரியா முக்கியமானவராகத் திகழ்வதை நாம் இதன் வழியாக அறிந்துகொள்ள முடிகிறது.

Wednesday 5 February 2014

கடவுளின் அடிமை

மரியா மனிதகுலத்தின் வணக்கத்திற்கு தகுதியானவர் என்று எப்படி கூற முடியும்?

   "மரியா உற்பவித்த முதல் கணத்தில் இருந்தே, தொடக் கப் பாவத்தின் கறையில் இருந்தும் மற்ற அனைத்து பாவங்களில் இருந்தும் முழுமையாக பாதுகாக்கப்பட்டு, தம் வாழ்நாள் முழுவதும் தூயவராகத் திகழ்ந்தார்." (கத் தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண். 508) "மீட்புத் திட்டத்தில் தம்மால் முன்பே தேர்ந்து கொள்ளப்பட்டவ ரான மரியா, தம் மகனின் சாயலுக்கு ஏற்றவாறு இருக்க வேண்டுமென கடவுள் இவ்வாறு முன்குறித்து வைத்தார்." (உரோமையர் 8:29) எனவே, "தம் உடலில் நிகழ்ந்த மறை நிகழ்ச்சிகள் வாயிலாக மனிதரைப் பாவத்தினின்று மீட்க வந்த இறைமகன் இயேசு, மரியாவிடம் இருந்து மனித இயல்பை எடுத்துக் கொண்டார்." (திருச்சபை எண். 55)
   "மரியாவின் கன்னிமையே கடவுளின் மனித உடலேற் புக்கு உண்மையான தொடக்கமாக அமைந்தது." (கத்தோ லிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண். 503) இறைத் தந்தையின் திட்டத்துக்கு "ஆம்" என பதில் அளித்ததால், இறைமகன் இயேசுவைத் தூய ஆவியின் வல்லமையால் கருத்தாங்கும் பேறுபெற்றவர் மரியா. "தம் முழு இதயத்தோடு கடவுளின் மீட்புத் திருவுளத்தை ஏற்று, தம் மகனுக்கும் அவரது அலுவலுக்கும் தம்மையே ஆண்டவரின் அடிமையாக மரியா முற்றிலும் கையளித்தார். இவ்வாறு எல்லாம் வல்ல கடவுளின் கையில் செயலற்ற ஒரு கருவியாக அல்லாமல், நம்பிக்கையாலும் கீழ்ப்படிதலாலும் மனித இனத்தின் நிறைவாழ் வுக்குத் தன்னுரிமையுடன் ஒத்துழைத்தவர் மரியா." (திருச்சபை எண். 55)
   "ஒரு மனிதரின் கீழ்ப்படியாமையால் அனைவரும் பாவிகளானதுபோல், ஒருவரின் கீழ்ப் படிதலால் அனைவரும் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்." (உரோமையர் 5:19) முதல் ஏவாளின் கீழ்ப்படியாமையால், மண்ணிலிருந்து வந்த முதல் ஆதாம் மனிதகுலத்தின் அருளை இழக்கச் செய்தார். புதிய ஏவாளான மரியாவின் கீழ்ப்படிதலால், விண்ணிலிருந்து வந்த புதிய ஆதாமான இயேசு மனிதகுலம் இழந்த அருளைப் பெற்றுத்தந்தார். இவ்வாறு, இறைவனின் மீட்பு அலுவலில் மரியா ஓர் இன்றியமையாத பகுதியாக ஆகிவிட்டார். இறைத்திட்டத்தில் உயிரோட்டமான சிறப்புமிக்க இடத்தை மரியா பெற்றிருப்பதால், கடவுளின் மகிமையும் பெரு குகின்றது." (மரியாயின் சேனை கைநூல் அதி. 5/1) எனவே, மரியா மனிதகுலத்தின் வணக் கத்திற்கு தகுதியானவர் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.