மன்றாட்டுமாலை

ஆண்டவரே இரக்கமாயிரும்,
   ஆண்டவரே இரக்கமாயிரும்.
கிறிஸ்துவே இரக்கமாயிரும்,
   கிறிஸ்துவே இரக்கமாயிரும்.
ஆண்டவரே இரக்கமாயிரும்,
   ஆண்டவரே இரக்கமாயிரும்.
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்,
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை தயவாய்க் கேட்டருளும்.

விண்ணகத்தில் இருக்கிற தந்தையாகிய இறைவா,
   எங்கள்மேல்  இரக்கமாயிரும்.
உலகத்தை மீட்ட மகனாகிய இறைவா,
   எங்கள்மேல்  இரக்கமாயிரும்.
தூய ஆவியாகிய இறைவா,
   எங்கள்மேல்  இரக்கமாயிரும்.
தூய்மைமிகு மூவொரு இறைவா,
   எங்கள்மேல்  இரக்கமாயிரும்.

பதில்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித மரியாவே,
இறைவனின் புனித மாதாவே,
கன்னியர்களுள் சிறந்த கன்னிகையே,
கிறிஸ்துவினுடைய மாதாவே,
இறை அருள்வரங்களின் மாதாவே,
மிகவும் புனிதமான மாதாவே,
மிகச்சிறந்த விரத்தியாயிருக்கிற மாதாவே,
பழுதற்ற கன்னியாயிருக்கிற மாதாவே,
கன்னித் தூய்மை கெடாத மாதாவே,
மிகுந்த அன்புக்கு உரியவளாயிருக்கிற மாதாவே,
ஆச்சரியத்துக்குரிய மாதாவே,
நல்ல ஆலோசனை மாதாவே,
படைத்தவருடைய மாதாவே,
மீட்டவருடைய  மாதாவே,
சிறந்த புத்தியுடைய கன்னிகையே,
மேலான வணக்கத்துக்குரிய கன்னிகையே,
துதிகளுக்கு உகந்தவளாயிருக்கிற கன்னிகையே,
ஆற்றல் உடையவளாயிருக்கிற கன்னிகையே,
இரக்கமுள்ள கன்னிகையே,
விசுவாசியாய் இருக்கிற கன்னிகையே,
தருமத்தின் கண்ணாடியே,
ஞானத்துக்கு இருப்பிடமே,
எங்கள் மகிழ்ச்சியின் காரணமே,
ஞானப் பாத்திரமே,
மகிமைக்குரிய பாத்திரமே,
மிகச்சிறந்த பக்தியுடைய பாத்திரமே,
மறைபொருளைக் கொண்ட ரோஜா மலரே,
தாவீது அரசரின் கோபுரமே,
அழகு மிளிரும் கோபுரமே,
பொன் மயமான ஆலயமே,
வாக்குறுதியின் பெட்டகமே,
விண்ணகத்தின் நுழைவாயிலே,
விடியற்காலத்தின் நட்சத்திரமே,
நோயாளிகளுக்கு நற்சுகமே,
பாவிகளுக்கு அடைக்கலமே,
துன்புறுவோருக்கு ஆறுதலே,
கிறிஸ்தவர்களின் சகாயமே,
வானதூதர்களின் அரசியே,
பெருந்தந்தையரின் அரசியே,
இறைவாக்கினர்களின் அரசியே,
திருத்தூதர்களின் அரசியே,
மறைசாட்சிகளின் அரசியே,
துதியர்களின் அரசியே,
கன்னியர்களின் அரசியே,
அனைத்துப் புனிதர்களின் அரசியே,
சென்மப் பாவமின்றி உற்பவித்த அரசியே,
விண்ணேற்பு அடைந்த அரசியே,
திருச்செபமாலையின் அரசியே,
சமாதானத்தின் அரசியே,
இந்திய நாட்டின் அரசியே,

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியாகிய இயேசுவே,
எங்கள் பாவங்களைப் பொருத்தருளும் சுவாமி.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியாகிய இயேசுவே,
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி. 
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியாகிய இயேசுவே,
எங்கள்மேல்  இரக்கமாயிரும் சுவாமி.

   இறைவனுடைய புனித மாதாவே, இதோ உம்முடைய சரணமாக ஓடி வந்தோம். எங்கள் தேவைகளுக்காக நாங்கள் மன்றாடும்போது பாராமுகமாய் இராதேயும். ஆசிபெற்றவளும், விண்ணகத்தில் இருக்கிறவளுமாகிய நித்திய கன்னிகையே, அனைத்து ஆபத்துகளில் இருந்தும் எங்களைத் தற்காத்துக் கொள்ளும்.

முதல்: இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்கள் ஆகும்படி,
எல்லோரும்: இறைவனின் தூய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

செபிப்போமாக:
   இறைவா, முழுமனதோடு உம் பாதம் பணிகிற இந்த குடும்பத்தைப் பார்த்து, எப்பொழுதும் கன்னியான புனித மரியாவின் வேண்டுதலினாலே, அனைத்து எதிரிகளின் சோதனைகளில் இருந்தும் இரக்கத்துடன் மீட்டருளும். இந்த மன்றாட்டுகளை எல்லாம் எங்கள் ஆண்டவரான இயேசு நாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். -ஆமென்.