Wednesday 30 July 2014

விண்ணகம்

மரியாவின் பரிந்துரையால் நாம் விண்ணகத்தைப் பெற முடியுமா?

   "விண்ணகத்தில் கடவுளின் கோவில் திறக்கப்பட்டது. அந்தக் கோவிலில் உடன்படிக்கைப் பேழை காணப்பட் டது." (திருவெளிப்பாடு 11:19) இறை இரக்கத்தின் அரிய ணையைத் தாங்கிய இந்த உடன்படிக்கைப் பேழையாகவே அன்னை மரியா செயல்படுகிறார். மோசேயின் சந்திப்புக் கூடாரத்தில் வைக்கப்பட்டிருந்த உடன்படிக்கைப் பேழை யின் வழியாக, இஸ்ரயேல் மக்கள் கடவுளின் திருவு ளத்தை அறிந்துகொண்டதுடன், அவரது ஆசியையும் வழி நடத்துதலையும் பெற்றனர். அவ்வாறே விண்ணக கோவி லின் உடன்படிக்கைப் பேழையாகத் திகழும் அன்னை மரியா, புதிய இஸ்ரயேலாகிய திருச்சபையின் மக்கள் அனைவரும் கடவுளின் திருவுளத்தை அறிந்துகொள்ள வும், அவரது அருள் வரங்களைப் பெற்றுக்கொள்ளவும் உதவுகிறார். எனவே, மரியாவின் உதவியை நாடுவோர் நிலை வாழ்வுக்கு தகுதி பெறுவார்கள் என்பதில் துளியள வும் சந்தேகம் இல்லை.
   "தூய கன்னி 'கடவுளின் தாய்' என்னும் கொடையாலும் அலுவலாலும் மீட்பரான தம் மகனோடு ஒன்றித்து இருக்கிறார்; தமக்குரிய தனிப்பட்ட அருள்கொடைகளாலும் அலுவல்களாலும் இவர் திருச்சபையோடும் நெருங்கிய முறையிலே இணைக்கப்பட்டிருக்கிறார். தூய அம்புரோஸ் ஏற்கெனவே கற்பித்ததுபோல், நம்பிக்கை, அன்பு, கிறிஸ்துவோடு கொண்டுள்ள நிறைஒன்றிப்பு ஆகியவற்றால் இறையன்னை திருச்சபையின் முன்மாதிரியாகத் திகழ்கிறார்." (திருச்சபை எண். 63) இவ்வாறு, "நிறைவாழ்வு வரலாற்றில் ஆழ்ந்து ஊன்றிய மரியா நம்பிக்கைப் பேருண்மைகளைத் தம்மில் ஒருவாறு இணைத்துப் பிரதிபலிக்கிறார். தாம் பறைசாற்றப்படும்போதும் வணங்கப்படும்போதும், நம்பிக்கை கொண் டோரைத் தம் மகனிடமும் அவரது பலிக்கும் இறைத்தந்தையின் அன்புக்கும் இட்டுச் செல் கின்றார்." (திருச்சபை எண். 65)
   "இறைவனின் தூய அன்னையும், புதிய ஏவாளும், திருச்சபையின் தாயுமான மரியா, கிறிஸ்துவின் உறுப்பினர்களுக்காக பரிந்துபேசும் பணியை விண்ணகத்திலும் தொடர்கிறார் என நாம் நம்புகிறோம்." (கத்தோலிக்க திருச்சபையின் மறைக் கல்வி எண். 975) இவ்வாறு, "தூய கன்னி கொண்டுள்ள நிறைவாழ்வளிக்கும் செல்வாக்கு அனைத்தும், கடவுளின் விருப்பத் திலிருந்தே உருவாகிறது; கிறிஸ்துவின் இணைப்பாளர் பணியையே அடித்தளமாகக் கொண் டுள்ளது; அதிலிருந்தே தன் ஆற்றல் அனைத்தையும் பெறுகின்றது; நம்பிக்கை கொண்டோர் கிறிஸ்துவுடன் கொண்டுள்ள நேர்முக ஒன்றிப்பை இச்செல்வாக்கு எவ்வகையிலும் தடுப்ப தில்லை; மாறாக அதைப் போற்றி வளர்க்கின்றது." (திருச்சபை எண். 60) எனவே, அன்னை மரியாவின் வழியாக விண்ணக வரங்களைத் தேடுவோர், அவரது பரிந்துரையால் விண்ண கத்தை பெற்றுக்கொள்வது உறுதி.

Wednesday 23 July 2014

செபமாலை

'செபமாலை' மூலம் மரியாவை வாழ்த்துவது கடவு ளுக்கு ஏற்புடையதா?

   "அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே!" என்று செபமாலை யில் நாம் வாழ்த்துகிறோம். எந்த ஒரு தனிமனிதரோ, திருச்சபையோ இந்த வாழ்த்தை உருவாக்கவில்லை. இது, கடவுளால் உருவாக்கப்பட்ட வாழ்த்து. தந்தையாம் இறை வனே கபிரியேல் தூதர் வழியாக, "அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" (லூக்கா 1:28) என்ற வார்த்தைகளால் மரியாவை வாழ்த்தினார். கடவு ளின் மீட்புத் திட்டத்தை மரியாவுக்கு அறிமுகம் செய்த வார்த்தைகள் இவை. "தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்" (லூக்கா 1:35) என்ற வானதூதரின் வார்த்தைகளுக்கு, "நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற் படியே எனக்கு நிகழட்டும்" (லூக்கா 1:38) என்று பதிலளித்த தால் மரியா இயேசுவின் தாயானார்.
   இறைமகனை கருத்தாங்கிய அன்னை மரியா, செக்கரி யாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தியதும், அவர் தூய ஆவியால் ஆட்கொள்ளப் பட்டார். அப்போது எலிசபெத்து உரத்த குரலில், "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!" (லூக்கா 1:42) என்று வாழ்த்தினார். இந்த வார்த்தைகள் தூய ஆவியாரின் தூண்டுதலால் எலிசபெத்து கூறியவை. இறைமகனை கரு வில் சுமந்து மீட்புத் திட்டம் நிறைவேற ஒத்துழைத்த அன்னை மரியாவை, இறைத்தந்தையும் இறைஆவியும் போற்றிப் புகழ்வதைக் காண்கிறோம். "கடவுளின் திருவுளத்தை நிறைவேற்று பவரே என் தாய்" (மாற்கு 4:35) என்று இயேசுவும் அன்னை மரியாவைப் பாராட்டுவதைக் காண்கிறோம். இவ்வாறு மூவொரு கடவுளால் வாழ்த்தப்பெற்ற மரியாவை ஆண்டவருக்கு விருப்பமான வார்த்தைகளில் புகழ்ந்து உதவி வேண்டுவதே செபமாலையின் அடிப்படை.
   கடவுளின் மீட்புத் திட்டத்தில் மறைபொருளின் ரோசா மலராகத் திகழும் கன்னி மரியா, 'இறைவனின் தாய்' என்ற மேலான பெருமையைப் பெற்றிருக்கிறார். இதன் காரணமாகவே கிறிஸ்து இயேசுவைப் போன்று, உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்தில் மாட்சியோடு திகழ்கிறார். எனவே, "திருச்சபை மரியாவைத் தனிப்பட்டதொரு வணக்கத்தால் தக்க காரணத் துடன் பெருமைப்படுத்துகிறது. திருச்சபையில் என்றும் இருந்து வரும் இவ்வணக்கம், மனித ரான வாக்குக்கும் தந்தைக்கும் தூய ஆவியார்க்கும் நாம் அளிக்கும் ஆராதனையிலிருந்து உள்ளியல்பிலேயே வேறுபட்டது." (திருச்சபை எண். 66) இந்த வணக்கத்தின் ஒரு பகுதியாகவே செபமாலை பக்தியும் அமைந்துள்ளது. இறைத்தந்தை மற்றும் தூய ஆவியாரின் வார்த்தைகள் மூலம் அன்னை மரியாவை வாழ்த்தி, அவரது பரிந்துரையை வேண்டுவது கடவுளுக்கு ஏற் புடைய செயலே.

Wednesday 16 July 2014

துயரில் ஆறுதல்

மரியாவை 'துன்புறுவோரின் ஆறுதல்' என்று அழைக்க காரணம் என்ன?

   மனித குலத்தைப் பாவங்களில் இருந்து மீட்பதற்காக, இறைமகன் இயேசு மனிதரின் கரங்களால் துன்புற வேண்டியிருந்தது. "இதோ, இக்குழந்தை எதிர்க்கப்படும் அடையாளமாக இருக்கும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்" (லூக்கா 2:34,35) என்ற சிமியோ னின் இறைவாக்கிற்கு ஏற்ப, இயேசுவின் துன்பத்தில் மரியாவும் பங்கேற்றார். கன்னி மரியா தூய ஆவியால் கருவுற்றதும், 'அவர் கணவர் யோசேப்பு அவரை மறை வாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.' (மத்தேயு 1:19) பெத்ல கேம் விடுதியில் இடம் கிடைக்காததால், இயேசுவை மரியா மாட்டுத் தொழுவத்தில் பெற்றெடுத்தார். (லூக்கா 2:7) ஏரோதிடம் இருந்து குழந்தை இயேசுவைக் காப்பாற்ற எகிப்துக்கு ஓடிச் சென்றார். (மத்தேயு 2:14) பன்னிரண்டு வயதில் எருசலேம் கோவிலில் தங்கிவிட்ட இயேசுவைத் தேடி மூன்று நாட்கள் அலைந்து திரிந்தார். (லூக்கா 2:46)
   இயேசுவின் பணி வாழ்வின்போதும், மரியா பல்வேறு பிரச்சனைகளை சந்தித்ததைக் காண்கிறோம். இறைமகன் இயேசுவை ஒரு சீடராகவும் தாயாகவும் மரியா பின்தொடர்ந்தார். அதேநேரத்தில், மகனை சந்திக்காமல் மரியா தனிமையில் வாழ்ந்த நாட்களும் பல இருந்தன. இறையாட்சிப் பணியை மட்டுமே நோக்கமாக கொண்டிருந்த இயேசு, மரியாவின் தாயன்பைக் காயப்படுத்திய தருணங் களும் உண்டு. இறுதியாக, மரணத் தீர்ப்புக்கு ஆளாகி சிலுவை சுமந்து சென்ற இயேசுவின் பாதையில் மரியாவும் பயணம் செய்தார். உலக மக்களைப் பாவத்தின் பிடியில் இருந்து விடுவிக்க, "தான் பெற்றெடுத்த மகனைப் பலியிடவும் அன்புடன் இசைந்தார்; தாயுள்ளத்தோடு தன்னையே அவரது பலியுடன் இணைத்தார்." (திருச்சபை எண். 58) இவ்வாறு இயேசுவின் மரணம் மற்றும் அடக்கத்தின்போது உடனிருந்த அன்னை மரியா, துயரத்தின் உச்சத்தை அனுபவித்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
   வாழ்நாள் முழுவதும் கடவுளுக்காக துன்பங்களை ஏற்றுக்கொண்ட மரியா, தம் மகனோடு விண்ணக மாட்சியில் பங்கு பெற்றிருக்கிறார். மனிதருக்குரிய அனைத்து துன்பங்களையும் சந்தித்தவர் என்பதால், நமது துன்ப நேரங்களில் பரிந்து பேசுபவராக இருக்கிறார். கானாவூர் திருமண வீட்டில் திராட்சை இரசம் தீர்ந்தபோது, அவர்களின் தேவையறிந்து அன்னை மரியா உதவி செய்ததை நற்செய்தி எடுத்துரைக்கிறது. "அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்ய முடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே" (யோவான் 2:4) என்று கூறிய இயேசுவின் மனதை தம் நம்பிக்கையால் மாற்றி, தண்ணீர் திராட்சை இரசமாக மாறிய முதல் புதுமை நிகழக் காரணமாக இருந்தவர் அன்னை மரியா. நமது துன்ப வேளைகளிலும் இத்தகைய வல்லமையுள்ள பரிந்துரையால் நாம் ஆறுதல் பெற முடியும் என்பதாலே, மரியன்னையை 'துன்புறுவோரின் ஆறுதல்' என அழைக்கிறோம்.

Wednesday 9 July 2014

வானக அரசி

உலக வரலாற்றில் பிறந்த மரியாவை 'வானதூதர்க ளின் அரசி' என்று எப்படி அழைக்க முடியும்?

   மரியா உலக வரலாற்றில் பிறந்தவர்தான் என்றாலும், அவரது பிறப்பு கடவுளின்  மீட்புத் திட்டத்தில் முக்கிய இடம் பெற்றிருந்தது. வரலாற்றுக்கு முன்பே, இறைமக னின் தாயாகுமாறு முன்குறிக்கப்பட்டவர் அன்னை மரியா. இறைவனின் மீட்புத் திட்டத்தை எதிர்த்த வானதூதர்களே அலகைகள் என்று பெயர் பெற்றதாக திருச்சபை கற்பிக் கிறது. மனித வரலாற்றில் தம்மை வெளிப்படுத்த விரும் பிய இறைவன், கன்னி மரியாவின் மகனாக இவ்வுலகில் தோன்ற விரும்பினார். இந்த திட்டத்தை வானதூதர்க ளுக்கு வெளிப்படுத்திய கடவுள், இறைமகனையும் இறை அன்னையையும் வணங்குமாறு கட்டளையிட்டார். இதை ஏற்று அதிதூதர் மிக்கேலின் தலைமையில் மூன்றில் இரண்டு பங்கு வானதூதர்கள், கன்னி மரியாவையும் குழந்தை இயேசுவையும் வணங்கியதாக கிறிஸ்தவ மரபு கூறுகிறது. இதிலிருந்தே, மரியா வானதூதர்களின் அரசி என்பதை உணர முடிகிறது.
   "வானதூதர்களைவிடத் தாழ்ந்த இனத்தில் பிறக்கும் இறைமகனையும், அவரது தாயையும் வணங்க முடியாது" என்று கூறி, லூசிபர் தலைமையில் மூன்றாவது பங்கு வானதூதர்கள் கிளர்ந்தெழுந்தனர். மிக்கேலும் அவரோடு சேர்ந்த தூதர் களும் லூசிபரின் கூட்டத்துக்கு எதிராக போரிட்டு, அவர்களை விண்ணகத்தில் இருந்து வெளி யேற்றியதாக திருச்சபைத் தந்தையர் கூறியுள்ளனர். இதன் காரணமாகவே, மனித குலத்தை பாவத்தில் வீழ்த்த தொடக்கம் முதலே அலகை சூழ்ச்சி செய்து வருகிறது. கடவுளின் திட்டத் துக்கு எதிராக மனிதரை செயல்படத் தூண்டும் வகையிலே அலகை எப்போதும் விழிப்புடன் செயலாற்றிக் கொண்டிருக்கிறது. தனது வீழ்ச்சிக்கு காரணமாக இருந்த வானதூதர்களின் அரசி யான கன்னி மரியாவை, மனிதர்களும் வணங்கவிடாமல் தடுப்பது அலகையின் நோக்கங் களில் ஒன்றாக இருக்கிறது.
   அனைத்துக்கும் மேலாக, இறைமகனின் தாய் என்ற உன்னத நிலையே கன்னி மரியாவுக்கு வானதூதர்களின் அரசியாகத் திகழும் மாண்பை அளித்துள்ளது.இவ்வுலக ஆட்சியாளர்களின் செயல்பாட்டில், அவர்களது குடும்பத்தினருக்கு உள்ள செல்வாக்கை காண்கிறோம். அவ்வாறே, அனைத்துலக அரசர் இயேசுவின் தாயான மரியா அனைத்துக்கும் அரசியாகத் திகழ்கிறார். "தம் மகனுக்குப் பிறகு, எல்லா வானதூதர்களுக்கும் மனிதர்களுக்கும் மேலாக கடவுளின் அருளால் உயர்த்தப்பட்டவரும், கிறிஸ்துவின் மறைநிகழ்ச்சிகளில் பங்கெடுத்தவருமாகிய மரியா கடவு ளின் தூய்மைமிகு தாய் ஆவார்." (திருச்சபை எண். 66) மேலும், "அருள்மிகப் பெற்றவரே வாழ்க! கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்" (லூக்கா 1:28,30) என்று கபிரியேல் தூதரால் வாழ்த்தப் பெற்ற கன்னி மரியாவை, வானதூதர்களின் அரசி என்று அழைப்பதில் தவறொன்றும் இல்லை.

Wednesday 2 July 2014

புனிதப் பேழை

மரியாவை 'உடன்படிக்கைப் பேழை' என்று அழைப்பது ஏன்?

   பழைய உடன்படிக்கையின் அடையாளமாக பொன் தகடு வேய்ந்த பேழை இருந்தது போல, புதிய உடன்படிக்கை யின் அடையாளமாக தாழ்ச்சியால் அணி செய்யப்பட்ட அன்னை மரியா திகழ்கிறார். "உடன்படிக்கைப் பேழையில் மன்னா வைக்கப்பட்டிருந்த பொற்சாடியும், ஆரோனின் தளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன." (எபிரேயர் 9:4) புதிய உடன்படிக்கைப் பேழை யான அன்னை மரியாவிடமும் இத்தகையப் பொருட்கள் இருந்ததைக் காண்கிறோம். வானத்தில் இருந்து பொழியப் பட்ட உணவாகிய மன்னாவைக் கொண்ட பொற்சாடிக்கு நிகராக, "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவாகிய" (யோவான் 6:51) இயேசுவைத் தாங்கிய கருப்பை மரியாவிடம் இருக்கிறது. உயிர்ப்புக்கு அடையா ளமான ஆரோனின் கோலுக்கு மாற்றாக, "உயிரும் உயிர்ப் புமான" (யோவான் 11:25) இயேசுவைக் காண்கிறோம். இறைவார்த்தையைத் தாங்கிய கற்பலகைகளுக்கு பதி லாக, "மனிதரான இறைவார்த்தையே" (யோவான் 1:14) மரியாவின் வயிற்றில் இருந்தார்.
   இவ்வாறு, மரியா உடன்படிக்கைப் பேழையாகத் திகழ்வதற்கு விவிலியமே சான்று பகர் வதைக் காண்கிறோம். மேலும், "சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலை நாட்டவும் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார்" (கொலோசையர் 1:20) என்பதால், இயேசுவே மனிதகுலத்தோடு தந்தையாம் கடவுள் செய்துகொண்ட புதிய உடன்படிக்கையாகத் திகழ்கி றார். எனவே, இயேசுவைக் கருத்தாங்கிய அன்னை மரியா 'உடன்படிக்கைப் பேழை' என்று அழைக்கப்படுகிறார். மோசே வழியாக செய்யப்பட்ட பழைய உடன்படிக்கைக்கு கடவு ளின் திருச்சட்டம் அடிப்படையாக இருந்தது போல, புதிய உடன்படிக்கையில் கிறிஸ்து இயேசு போதித்த அன்பே ஆதாரமாக விளங்குகிறது. இந்த அன்பின் உடன்படிக்கையை உலகிற்கு கொண்டுவந்த பேழையாக அன்னை மரியா திகழ்கிறார்.
   மேலும், 'மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார்.' (லூக்கா 1:39) என்று காண்கிறோம். பழைய உடன்படிக்கைப் பேழையும் யூதேய மலை நாட்டில் பயணித்ததை விவிலியம் எடுத்துரைக்கிறது: 'தாவீதும் அவரோடு இருந்த மக்கள் அனைவரும் கடவுளின் பேழையைக் கொண்டுவர பாலை யூதாவுக்குச் சென்றனர்.' (2 சாமுவேல் 6:2) 'மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சி யால் துள்ளிற்று.' (லூக்கா 1:41) அவ்வாறே, 'தாவீதும் இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் ஆண்டவருக்கு முன்பாக ஆடிப்பாடிக் கொண்டு வந்தார்கள்.' (2 சாமுவேல் 6:5) "என் ஆண்ட வரின் தாய் என்னிடம் வர நான் யார்?" (லூக்கா 1:43) என்று எலிசபெத்து கேட்டது போன்றே, "ஆண்டவரின் பேழையை நான் எவ்வாறு ஏற்றுக் கொள்வேன்?" (2 சாமுவேல் 6:9) என்று தாவீது வினவியதைக் காண்கிறோம். 'மரியா மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்த பின்பு வீடு திரும்பினார்.' (லூக்கா 1:56) 'ஆண்டவரின் பேழை ஓபோது ஏதோமின் இல்லத்தில் மூன்று மாதங்கள் தங்கிற்று.' (2 சாமுவேல் 6:11)