மரியாவின் வாழ்வு

புனித மரியாவின்  பிறப்பு:
   எருசலேம் நகரில் வாழ்ந்த செல்வந்தரான யோவாக்கிம் (சுவக்கீன்), அவரது மனைவி அன்னா (அன்னம்மாள்) இருவ ரும் குழந்தைப்பேறு இல்லாமல் முதுமை அடைந்தனர். இறைவன் தமது வானதூதர் வழியாக மரியாவின் பிறப்பை அவர்களுக்கு அறிவித்தார். அதனால் மனம் மகிழ்ந்த அவர் கள் பிறக்கப் போகும் குழந்தையை எருசலேம் ஆலயத்தில் அர்ப்பணிப்பதாக நேர்ந்து கொண்டனர். பத்தாம் மாதத்தில் அன்னா தனது குழந்தையைப் பெற்றெடுத்தார். வானதூதர் அறிவித்தபடியே அக்குழந்தைக்கு மரியா (கடலின் நட்சத் திரம்) என்று பெயரிட்டனர். 

எருசலேம் ஆலயத்தில் மரியா:
   மரியாவுக்கு மூன்று வயது ஆனபோது, அவரது பெற்றோர் மரியாவை எருசலேம் ஆலயத்தில் அர்ப்பணித்தனர். அவரை பெரிய குரு செக்கரியா வரவேற்றார். மரியா ஆலய கல்வி சாலையில் எபிரேய எழுத்துகளை எழுதவும் வாசிக்கவும் கற்றுக்கொண்டார். விவிலியத்தின் பழைய ஏற்பாட்டு நூல் களை படித்து, அதில் இருந்த மெசியா பற்றிய இறைவாக்கு களின் பொருளைக் கேட்டுத் தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருந்தார். மறைநூல் வார்த்தைகளை வாசித்து அவற்றை மனதில் இருத்தி சிந்திப்பதில் மரியா ஆர்வம் கொண்டிருந்தார்; பாடல்களைப் பாடுவதிலும், செபிப்பதிலும் சிறந்து விளங்கினார். ஆலயத்திற்கு தேவையான திரைச் சீலைகளை நெய்வதிலும் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தார்.

மரியா யோசேப்பின் மனைவி:
   மரியாவுக்கு பதினான்கு வயதானபோது, அவருக்கு திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் நடைபெற்றன. எருசலேமில் இருந்த தாவீதுகுல இளைஞர்கள் அனைவரும் சுயம்வரத்திற்கு அழைப்பு பெற்றனர். அவர்களில் தச்சுத் தொழிலாளரான யோசேப்பின் கோலில் லீலி மலர் துளிர்க்கச் செய்து இறைவன் அடையாளம் காட்டினார். கன்னி மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமணம் நடைபெற்றது. மரியாவைத் தனது வீட்டில் விட்டுவிட்டு கட்டட வேலைகளுக்காக யோசேப்பு வெளியூர் சென்றார். அவ்வேளை யில்தான் வானதூதர் கபிரியேல், ஆண்டவர் இயேசுவின் பிறப்பு பற்றி மரியாவுக்கு அறிவித்தார்; எலிசபெத் பேறுகாலமாக இருந்த தையும் தெரிவித்தார். மரியா தனது உறவினரான எலிசபெத்துக்கு உதவி செய்ய யூதேயாவுக்கு புறப்பட்டு சென்றார்.

மரியா இயேசுவின் அன்னை:
   மரியா அங்கிருந்து திரும்பியபோது மூன்று மாத கர்ப்பிணியாக நாச ரேத்துக்கு வந்து சேர்ந்தார். அதனால் யோசேப்புக்கு சந்தேகம் ஏற்பட்டது. இறைவனின் திட்டப்படியே மரியா தூய ஆவியால் கருவுற்றிருப்பதை வானதூதர் கனவில் தெளிவுபடுத்தினார். உண்மை நிலையை உணர்ந்து கொண்ட யோசேப்பு, மரியாவை தமது வாழ்க்கைத் துணையாக மீண்டும் ஏற்றுக்கொண்டார். அவர்கள் இருவரும் பெத்லகேம் சென்றிருந்த வேளை யில் மாட்டுத் தொழுவம் ஒன்றில் மரியா இயேசுவைப் பெற்றெடுத்தார். எட்டாம் நாளில் இயேசுவுருக்கு விருத்தசேதனம் செய்து பெயரிட்ட அவர்கள், நாற்பதாம் நாளில் அவரை எருசலேம் ஆலயத்தில் காணிக்கை யாக ஒப்புக்கொடுத்தனர். அப்போது அங்கு வந்திருந்த இறைவாக்கினர் சிமியோன், மரியாவின் வியாகுலங்களை முன்னறிவித்தார். பின் மரியா வும் யோசேப்பும் குழந்தை இயேசுவுடன் நாசரேத் திரும்பினர்.

மரியா திருக்குடும்பத்தின் தலைவி:
   இயேசுவுக்கு பன்னிரண்டு வயது நடந்தபோது, மரியாவும் யோசேப்பும் இயேசுவைக் கூட்டிக்கொண்டு பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர். அப்போது இயேசு ஆலயத்தி லேயே தங்கிவிட்டார். மரியாவும் யோசேப்பும் மூன்று நாட்கள் அங்கும் இங்கும் அலைந்து தேடினர். இறுதியாக, இறைத்தந்தை யின் விருப்பத்தை நிறைவேற்றும் இறைமகனாக இயேசுவை ஆல யத்தில் கண்டனர். பின்னர் அவர்களோடு நாசரேத் திரும்பிய இயேசு பெற்றோருக்கு பணிந்து நடந்தார். அவர் யோசேப்புக்கும், மரியாவுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வந்தார். திருக்குடும்பத்தின் தலைவியான மரியா யோசேப்புக்கு நல்ல மனைவியாகவும், இயேசுவுக்கு நல்ல தாயாகவும் சிறந்து விளங்கினார்.

இயேசுவின் சீடராக மரியா:
   உலகில் மனிதராக தோன்றிய இறைமகனையும், அவரது தாய் மரியாவையும், தமது உழைப்பின் மூலம் பாதுகாக்கும் பொறுப்பை முழுமையாக நிறைவேற்றிய யோசேப்பு முதுமைக் காலத்தில் நோயுற்றார். இயேசுவும் மரியாவும் அருகில் இருக்க அவர் பாக்கிய மான மரணம் அடைந்தார். அதன்பின் சிறிது காலம் தச்சுத்தொழில் செய்துவந்த இயேசு, யோவானிடம் திருமுழுக்கு பெற்று தனது இறையரசு பணியைத் தொடங்கினார். இயேசுவின் பணிவாழ்வில் மரியாவும் அவரைப் பின்தொடர்ந்தார். இயேசு கிறிஸ்து செய்த முதல் புதுமையே மரியாவின் பரிந்துரையால்தான் நடைபெற்றது. தாய்க்குரிய அன்போடும், இறைவனின் திருவுளத்தை நிறைவேற் றும் சீடருக்குரிய உள்ளத்தோடும் மரியா இயேசுவைப் பின்பற்றி நடந்தார்.

மரியா கிறிஸ்தவர்களின் தாய்:
   "உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்" என்ற இறைவாக்கினர் சிமியோனின் வார்த்தைகள் நிறைவேறும் வகை யில், இயேசுவின் சிலுவைப் பாடுகளிலும் மரியா பங்கேற்றார். சிலுவையின் அடியில் வியாகுலத் தாயாக நின்ற அவரை, "இதோ உன் தாய்" என்ற வார்த்தைகள் மூலம் இயேசு தனது சீடர்கள் (கிறிஸ்தவர்கள்) அனைவருக்கும் தாயாகத் தந்தார். இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம் ஆகியவற்றுக்கு பிறகு இயேசுவின் சீடர் கள் அனைவரும் மரியாவின் வழிகாட்டுதல்படியே வாழ்ந்து வந்த னர். அன்னை மரியாவோடு வேண்டுதல் செய்து கொண்டிருந்த போதுதான், திருத்தூதர்கள் மீது தூய ஆவியார் இறங்கி வந்தார். அவர்கள் பல்வேறு நாடுகளுக்கு நற்செய்தி அறிவிக்க சென்றபின் திருத்தூதர் யோவானின் பாதுகாப்பில் மரியா வாழ்ந்து வந்தார்.

அன்னை மரியாவின் மரணம்:
   இயேசுவின் வின்னேற்றத்துக்கு பிறகு பதினாறு ஆண்டளவாக அன்னை மரியா இவ்வுலகில் வாழ்ந்தார். அவருடைய மரண காலம் நெருங்கி வந்தபோது, வெளிநாடுகளில் இருந்த திருத்தூதர்கள் அனை வரும் உள்ளுணர்வால் தூண்டப்பட்டு எருசலேம் நோக்கி விரைந்தனர். தோமா தவிர மற்ற திருத்தூதர்கள் அனைவருக்கும் ஆசி வழங்கிய நிலையில் அன்னை மரியா மரணம் அடைந்தார். யூதர்களின் வழக்கப் படி அன்னையின் உடலை திருத்தூதர்கள் விரைவில் அடக்கம் செய்து விட்டனர். தாமதமாக எருசலேம் வந்து சேர்ந்த தோமா, மரியாவிடம் இறுதி ஆசீர் பெற முடியாமல் போனது குறித்து மனம் வருந்தினார். எனவே அன்னை மரியாவின் முகத்தையாவது இறுதியாக ஒருமுறை பார்க்க வேண்டுமென்ற தமது ஆசையை தோமா மற்ற திருத்தூதர் களிடம் வெளிப்படுத்தினார்.

விண்ணேற்பு அடைந்த அரசி:
   தோமாவுடன் சேர்ந்து திருத்தூதர்கள் அனைவரும் மரியாவை அடக்கம் செய்த கல்லறைக்கு சென்றனர். அவர்கள் கல்லறையைத் திறந்து பார்த்தபோது அன்னை மரியாவின் உடலைக் காணாமல் அவர்கள் திகைத்தனர். அதே நேரத்தில் அங்கே நிலவிய விண்ணக நறுமணம் அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை உணர்த்தி யது. இறைமகன் இயேசு தம் அன்னையின் உடலை இவ்வுலகில் அழிவுற விடாமல், மரியாவை உடலோடும் ஆன்மாவோடும் விண் ணகத்தில் ஏற்றுக்கொண்டார் என்பதை திருத்தூதர்கள் உணர்ந்து கொண்டனர். அதன்பின் திருத்தூதர் தோமாவுக்கு காட்சி அளித்த அன்னை மரியா, தாம் விண்ணக மாட்சியில் இருப்பதை உறுதி செய்தார். இறையன்னை மரியா, வானதூதர்கள் உள்பட படைப்புகள் அனைத்துக்கும் மேலான மாட்சியைப் பெற்று விளங்குகிறார்.

விண்ணக மண்ணக அரசியே வாழ்க!