Wednesday 12 March 2014

கடவுளின் தாய்

இயேசுவை மனிதராக உலகிற்கு கொண்டு வந்த கருவி யான மரியாவை, 'கடவுளின் தாய்' என எப்படி அழைக்க முடியும்?

   '"இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப் பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்" என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே' (மத்தேயு 1:22) இறைமகன் இயேசு மனிதர் ஆனார். கடவுளும் மீட்பருமானவரின் தாயாகுமாறு தனிப் பட்ட அருள் வரங்களாலும், அலுவல்களாலும் அணி செய் யப்பட்டவராக மரியா திகழ்கிறார். இறைவனின் திட்டத் தால், கன்னியாக இருந்து கொண்டே தாயாகும் வரம் பெற் றவர் மரியா. "கணவரையே அறியாத அவர் தூய ஆவி நிழலிடத் தம் நம்பிக்கையாலும் கீழ்ப்படிதலாலும் இறைத் தந்தையின் மகனையே உலகில் பெற்றெடுத்தார்." (திருச் சபை எண். 63) எனவே. மரியாவின் தன்னுரிமையுள்ள ஒத் துழைப்பின் வழியாகவே "கடவுள் மனிதராகி நம்மிடையே குடிகொண்டார்" (யோவான் 1:14) என்பது தெளிவாகிறது.
   "நற்செய்திகளில், 'இயேசுவின் தாய்' என்று அழைக்கப்ப டும் மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும் முன்பே, அவரை 'ஆண்டவரின் தாய்' என தூய ஆவியின் தூண்டுதலால் எலிசபெத் அழைத்தார். உண்மையில், தூய ஆவியால் கன்னி மரியாவின் வயிற்றில் மனிதராக கருவான அதிபுனித திரித்துவத்தின் இரண்டாம் ஆளும், இறைத்தந்தையின் நித்திய மகனுமானவர், உடல் சார்ந்த முறையில் உண்மையிலேயே மரியாவின் மகன் ஆனார். எனவே, திருச்சபை மரியாவை உண்மை யாகவே 'கடவுளின் தாய்' (Theotokos) என்று அறிக்கையிடுகிறது." (கத்தோலிக்க திருச்சபையின் மறைக் கல்வி எண். 495) கண்ணுக்குப் புலப்படாதவரும், உலகமே கொள்ள முடியாதவருமான கடவுளை, தம் வயிற்றில் சுமந்து பெற்ற மரியாவை 'கடவுளின் தாய்' என்று அழைப்பதில் எந்த தவறும் இல்லை.
   "திருச்சபை முதலில் தோன்றிய காலத்தில் இருந்தே, இயேசு தூய ஆவியின் வல்லமை யாலே கன்னி மரியாவின் திருவயிற்றில் கருவானார் என்பதை அறிக்கையிடுகிறது; 'மனித வித்தின்றி தூய ஆவியின் வல்லமையால்' இயேசு கருவான நிகழ்வை உடல் சார்ந்த நிலை யில் உறுதிப்படுத்துகிறது. கன்னி கருத்தாங்குதலை, இறைமகன் நம்மைப் போன்று மனிதரா னதை உறுதிப்படுத்தும் அடையாளமாக திருச்சபைத் தந்தையர் காண்கின்றனர். எனவே அந்தி யோக்கு புனித இக்னேசியு, இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இவ்வாறு கூறுகிறார்: தூய கன்னியே, நீர் உறுதியாக நமது ஆண்டவரைக் கருத்தாங்கினீர்." (கத்தோலிக்க திருச் சபையின் மறைக்கல்வி எண். 496) "மனிதரான நித்திய இறைமகனும், கடவுளுமானவரின் தாயாக இருப்பதால், மரியா உண்மையிலேயே 'கடவுளின் தாய்'தான்!" (கத்தோலிக்க திருச் சபையின் மறைக்கல்வி எண். 509)